பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

bonda mani actor passed away தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான 'பவுனு பவுனுதான்' என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்களிலும் நடித்து தனது நகைச்சுவை திறனால் மகிழ்வித்த போண்டா மணிக்கு கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது. bonda mani actor passed away இதனையடுத்து மருத்துவமனையில் மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.


இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பல்லாவரத்தில் உள்ள வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை அவசர, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நகைச்சுவை நடிகர் போண்டா மணி மரணம் கேள்விப்பட்ட திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். bonda mani actor passed away More Details